search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம்
    X

    செடில் உற்சவம் நடந்தது.

    நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம்

    • குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
    • பாடைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஞாயிறு தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    அதனைத் தொடர்ந்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

    தேரை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலைக்கு வந்தது.

    இதேபோல், ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், படையல் இட்டும், பால்காவடி, பன்னீர்காவடி, வேப்பில்லை காவடி மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகள் எடுத்தும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    Next Story
    ×