என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே கோஷ்டி மோதலில் 4 பேர் மீது வழக்கு
- நம்பிராஜன் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த நவீனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
- ஜெகன் (40) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்க்க பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் பொருட்களை சேதப்படுத்தினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மகன் முகில்(வயது 20). இவர் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த நவீனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
சமாதானம்
கடம்போடுவாழ்வு ரோட்டில் சென்ற போது, மற்றொரு தரப்பை சேர்ந்த ராஜா உள்பட சிலர் சேர்ந்து தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து முகிலின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் தங்களுக்குள் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் இந்த சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத கடம்போடுவாழ்வை சேர்ந்த ராஜா உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவில் முகில் தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து முத்து(75) என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள மோட்டார் அறைக்கு தீ வைத்தனர்.
வழக்குப்பதிவு
தொடர்ந்து அந்த கும்பல், ஜெகன் (40) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்க்க பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் பொருட்களை சேதப்படுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடம்போடு வாழ்வை சேர்ந்த சின்னத்துரை மகன்கள் ராஜா, முத்து மற்றும் மாரியப்பன் மகன்கள் வெள்ளையன், கொம்பையா உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்