search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு

    • 2020-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
    • உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை.

    சென்னை :

    மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×