என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி
- செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற சரக்கு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:
சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியை சேர்ந்தவர் சாமுண்டி(வயது55). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் திருத்தேரி சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற சரக்கு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சாமுண்டி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






