நெல்லை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலி

நெல்லையை அடுத்த வன்னிகோனேந்தல் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் கனகராஜ்(வயது 28). தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
நெல்லை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலி
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த வன்னிகோனேந்தல் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் கனகராஜ்(வயது 28).

இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று கழுகுமலைக்கு சவாரி சென்றுவிட்டு இரவு தேவர்குளத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கனகராஜ் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதனை பார்த்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு விரைந்த சென்ற போலீசார் இடிபாட்டில் சிக்கியிருந்த கனகராஜை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com