search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கம்
    X

    கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கம்

    • திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது
    • வருகிற 5-ந் தேதி மாலை புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 6-ந் தேதி காலை செல்லும்.

    நெல்லை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தேவைகேற்ப சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் வருகிற 5-ந் தேதி மாலை புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 6-ந் தேதி காலை செல்லும். பின்னர் 6-ந் தேதி மாலை கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பு அங்கிருந்து பக்தர்கள் திரும்பி வரும் வகையிலும் இயக்கப்படுகிறது. இத்தகவலை நெல்லை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×