search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டில் திருட்டு
    X

    பூட்டிய வீட்டில் திருட்டு

    • இது குறித்து முருகானந்தம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்நிலையில் தனது மனைவி சூரியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்று இருந்தார். இன்று காலை திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, 3000 அமெரிக்கா டாலர், ஈராக் நாட்டு ரியால் 3000 ரொக்கம் 400 ஆயிரம்,பாஸ்போர்ட் உள்ளிட்டவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்து முருகானந்தம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×