என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பெள்ளேபாளையத்தில் உடைந்த நிலையில் இருக்கும் தடுப்பணை பெள்ளேபாளையத்தில் உடைந்த நிலையில் இருக்கும் தடுப்பணை](https://media.maalaimalar.com/h-upload/2022/12/07/1803180-mtpdam.webp)
பெள்ளேபாளையத்தில் உடைந்த நிலையில் இருக்கும் தடுப்பணை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் தடுப்பணை உடைந்தது.
- தடுப்பணையை சீரமைத்துதர விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஏழுசுளி பள்ளம் அமைந்துள்ளது. இப்பள்ளத்திற்கு காரமடை, பெள்ளாதி, தேரம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் இப்பள்ளத்தில் வந்து தேங்குகிறது.
இதனால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தடையின்றி கிடைத்து வருகிறது. மேலும் இப்பள்ளத்தில் இருக்கும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையினால் இப்பள்ளத்தில் உள்ள தடுப்பணை உடைந்தது. இதனால் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் பக்கத்து ஊர் குட்டை வழியாக பவானி ஆற்றை சென்றடைகிறது. இதனால் இப்பகுதியில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயம் கேள்வி குறியாகும் நிலையில் உள்ளது.
நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை இந்த தடுப்பணை சீரமைக்காமல் இருக்கிறது என ஊர் பொதுமக்கள் கூறினர். எனவே பவானி ஆற்றில் வீணாக செல்லும் குடிநீரை தடுத்து நிறுத்த ஏழுசுளி பள்ளத்தில் புதிய தடுப்பணை கட்ட வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)