search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாஞ்சோலை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு முன்பதிவு - கூடுதல் வாகனங்களுடன் வனத்துறை ஏற்பாடு
    X

    மாஞ்சோலை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு முன்பதிவு - கூடுதல் வாகனங்களுடன் வனத்துறை ஏற்பாடு

    • வனத்துறையினர் வாகனத்தில் செல்ல முதலில் வரும் 25 சுற்றுலா பயணிகள் மட்டுமே அழைத்து செல்லப்பட்டனர்.
    • மாஞ்சோலை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் அம்பை வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து செல்லலாம்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் கார்கள் உள்ளிட்ட வாகனங்க ளில் செல்வதற்கு அனுமதிக்கப்ப டுகின்றனர்.

    மேலும் வனத்துறை யினரின் சிறப்பு வாகனம் மூலமும் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். அவ்வாறு வனத்துறையினர் வாகனத்தில் செல்ல முதலில் வரும் 25 சுற்றுலா பயணிகள் மட்டுமே அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அதன்பிறகு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்தநிலையில் அனைவரும் மாஞ்சோலைக்கு சென்றுவரும் வகையில் வனத்துறை சார்பில் 10 மற்றும் 22 சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லக்கூடிய 2 வாகன ங்கள் வனத்துறை மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

    மாஞ்சோலை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் இந்த வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தி சுற்றுலா செல்லலாம் அல்லது அம்பை வனச்சரக அலுவலகத்தில் 04634 252594-ஐ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து செல்லலாம்.

    Next Story
    ×