search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்காலில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை உடல் மீட்பு
    X

    வாய்க்காலில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை உடல் மீட்பு

    • ஆற்றில் ஆண் குழந்தை சடலமாக மிதந்து கரை ஒதுங்கியது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள அனந்த கோபாலபுரம் கிராமத்தில் உள்ள ஒரு ஆற்று வாய்க்காலில் பிறந்து சில மணி நேரங்களில் உள்ள ஒரு ஆண் குழந்தை சடலமாக மிதந்து வந்து கரை ஒதுங்கியது.

    இந்த பிறந்து சில மணி நேரத்தில் சடலமாக வந்த குழந்தையை பார்த்து அந்த கிராம மக்கள் திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அந்த அடிப்படையில் அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் திருவோணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா உத்தரவின் பெயரில் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து சடலமாக வந்த பிஞ்சுக் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    பிறந்து சில மணி நேரங்களிலேயே இந்த குழந்தை ஆற்றில் வீசப்பட்டதால் யார் குழந்தை ஏன் இந்த குழந்தை வீசப்பட்டது.

    தவறான கள்ளத்தொடரில் பிறந்த குழந்தையா?

    போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் குழந்தைகளே இல்லாமல் தவிக்கும் பெற்றோர்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் பிறந்த சில மணி நேரங்களில் ஒரு ஆண் குழந்தை ஆற்றில் வீசப்பட்ட இந்த சம்பவம் திருவோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×