search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழில் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்க வேண்டும்
    X

    கல்லணை சாலையில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள போர்டு.

    தமிழில் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்க வேண்டும்

    • இந்த போர்டுகளில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ளன.
    • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்க வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மாநில சாலைகள் அகலபடுத்தப்பட்டு வருகின்றன. இதில் கல்லணை- திருவையாறு சாலை கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை அகலபடுத்தும் பணிகளில் திருச்செனம்பூண்டி வரை முடிந்துள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.முடிவடைந்த சாலைகளில் வெள்ளை கோடுகள், சாலை ஓரங்களில் மிளிரும் எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பான்கள் பொருத்தியுள்ளனர். சாலை அருகில் பள்ளிகள், வேகத்தடைகள் உள்ளதை குறிக்கும் பலகைகளை வைத்துள்ளனர்.

    அதே சமயத்தில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் நெடுஞ்சாலைதுறையினர் வைத்துள்ளனர். ஆனால் இந்த போர்டுகளில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ளன. இதனை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த ஓட்டுநர்களுக்கு புரியும் மொழியில் விளம்பர வாசகங்கள் எழுதலாம். ஆங்கில மொழியில் வாசகங்கள் வேண்டும் என்றால் இரு மொழிகளிலும் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கலாம். தமிழை புறக்கணித்து ஆங்கில வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதை உடனே மாற்றம் செய்து தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×