என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசியில் 24-ந் தேதி பா.ஜனதா பொதுக்கூட்டம்- அண்ணாமலை பங்கேற்பு
- ஒரு சில காரணங்களால் அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
- மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி:
தென்காசியில் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது.
ஒரு சில காரணங்களால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது.
இந்நிலையில் தென்காசி யில் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக்கூட்டம் வருகிற 24-ந் தேதி நடைபெறும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி, கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மண்டல் மையக்குழு உறுப்பி னர்கள், மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஜெகந்நாத் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா , மாவட்ட பார்வையாளர் மகாராஜன்,பாலகுருநாதன், ராமநாதன், பொதுச்செய லாளர்கள் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்