என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா : தூத்துக்குடியில் 18 வகையான மரக்கன்று நடும் பணி - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
- தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
- தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா, மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி மற்றும் மாமன்ற பிரதிநிதிகள் பதவியேற்று ஓராண்டு நிறைவு அடைவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்த மான தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்த உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள், 100-க்கணக்கான மாணவ-மாணவிகள், மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் அனை வரும் மரக்கன்றுகளை நட்டனர். இன்று ஒரே நாளில் 12.50 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் மரக்கன்று நடப்படுகிறது.
மீதமுள்ள மரங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி பகுதியில் அமைய பெற்றுள்ள பொது இடங்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் நடப்பட உள்ளது. இதில் மா பலா கொய்யா புளி,நவா, வேம்பு,புங்கன்,பூவரசு, கொடுக்கம்புளி, வாகை, இடும்பை, நீர்மருது, மகாகனி, தூங்குவாகை,நெல்லி, வாடாச்சி, சரக்கொன்றை, தான்றிக்காய் உள்ளிட்ட 18 வகையான மரக்கன்றுகள் இடம் பெற உள்ளன,
இந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது உரக்கிடங்கிற்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் மற்றும் தூத்துக்குடி மாநக ராட்சி மண்டல தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்