search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதல்
    X

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதல்

    • வள்ளியூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • இந்த விபத்தில் ராஜ்குமாரும், சேகரும் படுகாயம் அடைந்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது52). சம்பவத்தன்று இவரும், இவரது உறவினரான களக்காட்டை சேர்ந்த செல்லையா மகன் சேகரும் வள்ளியூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

    திருக்குறுங்குடி அருகே ராஜபுதூர்-கேசவநேரி சாலையில் நம்பி உடையார் சாஸ்தா கோயில் அருகே சென்ற போது, பின்னால் வந்த லோடு ஆட்டோ அவர்கள் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் ராஜ்குமாரும், சேகரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் இதுதொடர்பாக லோடு ஆட்டோவை ஓட்டி வந்த களக்காடு அருகே சிதம்பரபுரம், சேதுராயபுரத்தை சேர்ந்த தவசிக்கனி மகன் பொன் கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×