என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதல்
- வள்ளியூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
- இந்த விபத்தில் ராஜ்குமாரும், சேகரும் படுகாயம் அடைந்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது52). சம்பவத்தன்று இவரும், இவரது உறவினரான களக்காட்டை சேர்ந்த செல்லையா மகன் சேகரும் வள்ளியூரில் உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
திருக்குறுங்குடி அருகே ராஜபுதூர்-கேசவநேரி சாலையில் நம்பி உடையார் சாஸ்தா கோயில் அருகே சென்ற போது, பின்னால் வந்த லோடு ஆட்டோ அவர்கள் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் ராஜ்குமாரும், சேகரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் இதுதொடர்பாக லோடு ஆட்டோவை ஓட்டி வந்த களக்காடு அருகே சிதம்பரபுரம், சேதுராயபுரத்தை சேர்ந்த தவசிக்கனி மகன் பொன் கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்