என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி யூனியன் பொத்தையடி கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணிக்கான பூமி பூஜை
- பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் சாலை அமைக்க ஏற்பாடு செய்து தரக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது.
- இதையடுத்து அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
நெல்லை:
நாங்குநேரி யூனியன் பாப்பான்குளம் பஞ்சா யத்துக்கு உட்பட்ட பொத்தையடி கிராமத்தில் ஏராளமான தெருக்களில் சாலை வசதி இல்லாமல் இருந்துவந்தது. இதையடுத்து அந்த பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் சாலை அமைக்க ஏற்பாடு செய்து தரக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது.
உடனடியாக அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்க ஏற்பாடுகள் செய்தார். இதையடுத்து அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின் கலந்து கொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். அப்போது பாப்பாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கிளை செயலாளர் ஜெயக்குமார், மகளிர் அணி பாமா, ஜாய்ஸ் மேகலா, வரலட்சுமி, அரசு ஒப்பந்ததாரர் சிவனேஷ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்