என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பசாமி கோவிலில் பால்குட ஊர்வலம்
    X

    கருப்பசாமி கோவிலில் பால்குட ஊர்வலம்

    • பச்சைக்காளி, பவளக்காளி, எட்டுக்கைகாளி வேஷமிட்டு பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
    • தொடர்ந்து கருப்பசாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் சித்தர்புரம் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது.அதனை முன்னிட்டு திருநகரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி புறப்பட்டனர்.மகா சக்தி கரகம், பச்சைக்காளி, பவளக்காளி, எட்டுக்கைகாளி வேஷமிட்டு பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.மங்கள வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனர்.

    தொடர்ந்து சாமிக்கு பால்குடங்கள் கருப்புசாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது மகாதீபாரதனை நடைபெற்றது. உள்ளுர் பக்தர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருப்பசாமி பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கருப்பு சாமியாக திலகர் ராஜா பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி அருளாசியும் வழங்கினார்.

    Next Story
    ×