search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே செல்லியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்
    X

    பக்தர் பால்குடம் எடுத்து வருவதை படத்தில் காணலாம்.

    திட்டக்குடி அருகே செல்லியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

    • திட்டக்குடி அருகே செல்லியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    • ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. முதல்முறையாக செல்லியம்மனுக்கு 108 பால்குட வழிபாடு நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தை பெண்கள், ஓடைப்பகுதியில் இருந்து சக்தி கரகத்தின் பின்னால் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷமிட்டவாறு கோயில் வளாகத்திற்கு சென்று 108 பால்குடத்தில் கொண்டுவரப்பட்ட பாலால் செல்லி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    Next Story
    ×