search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
    X

    கோவையில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

    • தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை செய்பவர்களுக்காக தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்கப்பட்டன, வடமாநில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    கோவை,

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டி கையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப் படுகிறது. பக்ரீத் பண்டிகையை யொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற்சாகம் அடைந்த னர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடு பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடைகளுடன் திரளாக வந்திருந்து சிறப்பு தொழுகை நடத்தினார்கள். அதன்பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை செய்பவர்களுக்காக தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்கப்பட்டன. இதனை வடமாநில் தொழி லாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் மப்டி உடையில் ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிநவீன கருவிகள் மூலம் பள்ளிவாசல் வளாகம், வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை மேற்கொ ண்டனர்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலை யில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற னர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று காலையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில்

    1000- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபு ரம், புரசைவாக்கம், அண்ணா நகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப் பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்ற னர்.

    Next Story
    ×