search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணி நடந்தது.

    விழிப்புணர்வு பேரணி

    • முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில பேரணி.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது

    நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜி.ராணி தலைமை வகித்தார்.

    அம்மாபேட்டைஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், அரிமாசங்க தலைவர் முரளி,ரெட்கிராஸ் சங்க தலைவர் சேவியர், மனவலகலை மன்றம் ராமநாதன், பள்ளிதலைமை ஆசிரியர் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழிப்புணர்வு பேரணியை அரிமா சங்க மாவட்ட தலைவர் நைனா குணசேகரன், தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

    மாற்று திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து ஒருங்கிணைந்து செயல்படும்விதமாக இந்த பேரணி நடைபெற்றது.

    இதில் பள்ளி ,மேற்பார்வையாளர் செல்லையன், ஆசிரியர் முருகேசன்,வார்டு உறுப்பினர் தீபா, மேலாண்மைக்குழுதுணை தலைவர் நதியா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×