search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு துறையினர்.

    விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும்.

    சுவாமிமலை:

    தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் கார்த்தி வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடந்தது.

    இதில் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பருத்தி ஆடைகள் அணிந்து கொண்டு மாணவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    மேலும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பின்னர், மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளி தலைவர் கார்த்திகேயனை, மாணவர்களின் பெற்றோ ர்கள் பாராட்டினர்.இதில் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கலந்துகொண்டு மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் வைத்துக்கொள்ள கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் பேசினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அம்பிகாபதி செய்திருந்தார்.

    இதில் தீயணைப்பு துறை பணியாளர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×