search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோவில் பயணியின் சுண்டுவிரலை துண்டாக கடித்து துப்பிய டிரைவர்- கம்பி மீது கால் வைத்ததால் ஆத்திரம்
    X

    ஆட்டோவில் பயணியின் சுண்டுவிரலை துண்டாக கடித்து துப்பிய டிரைவர்- கம்பி மீது கால் வைத்ததால் ஆத்திரம்

    • சந்தானத்திற்கும், பயணி ராமுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சிகிச்சை அளித்த டாக்டர்கள் கை விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    திருவான்மியூர்:

    வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ராமு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து திருவான்மியூர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார். டிரைவராக சந்தானம் இருந்தார். ஆட்டோ சென்று கொண்டு இருந்தபோது டிரைவர் இருக்கையின் பின்புறம் உள்ள கம்பியில் ராமு தனது காலை வைத்ததாக தெரிகிறது. இதற்கு டிரைவர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சந்தானத்திற்கும், பயணி ராமுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த டிரைவர் சந்தானம் ஆட்டோவில் இருந்த கம்பியால் ராமுவை தாக்கினார். மேலும் ராமுவின் கை சுண்டு விரலை துண்டாக கடித்து துப்பினார். இதில் ரத்தம் வடிந்த நிலையில் துடித்த ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கை விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சந்தானத்தை கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×