என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
- கொள்ளையன் வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து. கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.
- இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
சீர்காழி:
சீர்காழி அருகே சேந்தங்குடி கூட்டுறவு நகரை சேர்ந்தவர் ஜான் விக்டர் (64).தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார். இவரது மகன் சார்லஸ் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஜான் விக்டர் அவரது மனைவி ரோஸ்மேரி மற்றும் மருமகள் அரசி பேரக்குழந்தைகள் ஆகியோருடன் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்
இந்நிலையில் கொள்ளையன் பூட்டி இருந்த வீட்டின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான்.
இந்நிலையில், இரவு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் சைரன் சத்தம் கேட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
மதியம் வீட்டிற்கு வந்த பணியாட்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஜான் விக்டருக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் ஜான் விக்டர் வீட்டுக்கு உடனடியாக சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர்.
இதனிடையே வெளியூர் சென்றிருந்த ஜான் விக்டரும் உடனடியாக புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார்.
அதிர்ச்சியுடன் வீட்டின் உள்ளே சென்று நகை பணம் கொள்ளை போகியுள்ளதா என்று பார்த்தபோது இரண்டு அறைகளை உடைத்து இருந்த திருடன் நகை பணம் உள்ள அறையினை உடைக்காமல் சென்றது தெரிய வந்தது.
அந்த அறைகளில் சுமார் 70 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் இருந்தது என ஜான் விக்டர் தெரிவித்தார்.
கொள்ளையன் மாஸ்க் மற்றும் கையுறைகள் அணிந்து வீட்டில் நுழையும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது இதனை கைப்பற்றி சீர்காழி போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்