search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்
    X

    நாங்குநேரி அருகே சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்

    • அரவிந்த்குமார் விருதுநகரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • கார்த்திக் உள்ளிட்டோர் வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

    களக்காடு:

    விருதுநகர் லெட்சுமிநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது34). இவர் விருதுநகரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இவரும், இவரது நிறுவனத்தில் பணிபுரியும் 10 பெண்களும் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் மாலையில் வேனில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    தகராறு

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் நான்குவழி சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த ஜீப், வேன் மீது உரசுவது போல் வந்தது. இதைப்பார்த்த அரவிந்த்குமார் வேனை நிறுத்தி, ஜீப்பில் வந்த மஞ்சங்குளத்தை சேர்ந்த கார்த்திக் (30), தோவா ளையை சேர்ந்த நாகசுமன் (25), ஏர்வாடியை சேர்ந்த சேக்மன்சூர் (19) ஆகியோர் களிடம் தட்டி கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் உள்பட 3 பேரும் சேர்ந்து, அரவிந்த்குமார், வேன் டிரைவரான விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர், துலுக்கர்பட்டியை சேர்ந்த நாகராஜ் (31), சூலக்கரையை சேர்ந்த மாதவி (45) ஆகியோரை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    வேன் கண்ணாடி உடைப்பு

    மேலும் வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் ஜீப்பில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×