என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
- நாகராஜ் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- மணிகண்டன் தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அணிக்கொரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் ஊட்டியில் இருந்து அணிக்கொரை செல்வதற்காக மார்லிமந்து செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நாகராஜ் காயமடைந்தார். பின்னர் இருதரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஸ்கூட்டியில் வந்த பெண் உள்பட 3 பேர், நாகராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து நாகராஜ் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாகராஜை தாக்கியது கடநாட்டை சேர்ந்த மணிகண்டன் (29), ஊட்டி பசுவையா நகரை சேர்ந்த சத்தியவாணி, விஷ்ணு என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிவதும், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்