search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் மாமியார் மீது தாக்குதல்
    X

    சிவகிரியில் மாமியார் மீது தாக்குதல்

    • பெண்ணை தாக்கிய மருமகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனது குழந்தையை தருமாறு வாக்குவாதம்

    சிவகிரி:

    சிவகிரி அண்ணா நடுத்தெருவை சேர்ந்த செல்வக்குமார்- கிருஷ்ணவேணி தம்பதியரின் மகள் பவித்ரா. இவரை அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 35) என்பவர் திருமணம் செய்துள்ளார்.

    தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து கடந்த ஒரு வருடமாக தனது குழந்தையுடன் பவித்ரா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    நேற்று ராஜா தனது மாமனார் வீட்டிற்கு சென்று மாமியார் கிருஷ்ண வேணியிடம் தனது குழந்தையை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் தனது மாமியாரை தாக்கி உள்ளார். இதையடுத்து கிருஷ்ணவேணி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×