search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே கணவன், மனைவி மீது தாக்குதல்- தந்தை- மகன் கைது
    X

    நாங்குநேரி அருகே கணவன், மனைவி மீது தாக்குதல்- தந்தை- மகன் கைது

    • இசக்கியப்பனுக்கும், கொம்பையாவிற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், பலவேசக்கண்ணும் சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி இசக்கியப்பன் (வயது67). இவருக்கும், இவரது தம்பி கொம்பையாவிற்கும் (60) இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இசக்கியப்பன் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொம்பையாவிற்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், அவரது மகன் பலவேசக்கண்ணும் (33) சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த இசக்கியப்பனின் மனைவி அம்மா பொன்னுவையும் (60) தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த இசக்கியப்பன், அம்மாபொன்னு ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொம்பையா, அவரது மகன் பலவேசக்கண்ணு ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×