search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே தந்தை,மகள் மீது தாக்குதல்- வாலிபர் கைது
    X

    நாங்குநேரி அருகே தந்தை,மகள் மீது தாக்குதல்- வாலிபர் கைது

    • தகராறின்போது முத்துசரவணன், இசக்கியை கம்பால் தாக்கினார்.
    • காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் போலீஸ் சரகம் பதைக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி (வயது 45). விவசாயி. இவரது மகன் முருகன், அதே ஊரை சேர்ந்த முத்துசரவணனுடன் (23) ஒரே மோட்டார் சைக்கிளில் அடிக்கடி வந்துள்ளார். இது இசக்கிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அவர் முத்துசரவணனை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துசரவணன், இசக்கியை கம்பால் தாக்கினார். இதைப்பார்த்த இசக்கியின் மகள் அதனை தடுக்க வந்தார். அவரையும் முத்துசரவணன் கம்பால் தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி விஜய நாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துசரவணனை கைது செய்தனர்.

    Next Story
    ×