search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே விவசாயி மீது தாக்குதல்
    X

    நாங்குநேரி அருகே விவசாயி மீது தாக்குதல்

    • நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி மரிய ஜெபஸ்டின்.
    • தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மரியஜெபஸ்டினை வழிமறித்து தாக்கினார்

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி மரிய ஜெபஸ்டின் (வயது51). இவரது சகோதரர் எவரெஸ்ட் அதே ஊரைச் சேர்ந்த ராபின் என்பவரது தாயாரிடம் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் ராபினுக்கும், எவரெஸ்டுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மரியஜெபஸ்டின் தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் ராபின் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவி ஜெனிட்டா மேரியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மரியஜெபஸ்டினை வழிமறித்து தாக்கினார். தொடர்ந்த கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராபினை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×