search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே விவசாயி உள்பட 2 பேர் மீது தாக்குதல்
    X

    களக்காடு அருகே விவசாயி உள்பட 2 பேர் மீது தாக்குதல்

    • ஒரு மாதத்திற்கு முன்பு முகேஷ் என்பவருக்கும், மதன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • சிவா உள்பட 4 பேரும் சேர்ந்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடியை சேர்ந்தவர் ராமன் (வயது 45). விவசாயி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், மதன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கு ராமன் தான் காரணம் என முகேஷ் குடும்பத்தினர் கருதினர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராமன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகேஷ் (26), அவரது சகோதரர் அஜித் (23), நம்பிராஜன் மகன் பவின் (24), காரியாண்டியை சேர்ந்த சிவா ஆகிய 4 பேரும் சேர்ந்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    அதனை தடுக்க வந்த ராமனின் மாமனார் சுப்பிரமணியனையும் அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து ராமன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகேஷ், அஜித் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×