என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் அருகே ஏ.டி.எம். மிஷினை உடைத்த வாலிபர் கைது
- திண்டிவனம் அருகே ஏ.டி.எம். மிஷினை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அங்குள்ள அரசு வங்கியின் அருகில் உள்ள ஏ.டி.எம். மிஷினை மர்ம நபர் ஒருவர் உடைத்ததாக பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையின் மூலம் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராஜபா ளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 32) என்பதும், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மை யத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சி செய்த போது ஏ.டி.எம். மிஷினில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்து ஏ.டி.எம். மிஷினை உடைத்ததாகவும், தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்