என் மலர்
உள்ளூர் செய்திகள்

காளியம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை காளியம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
- அசுரனை அழிக்கும் வைபவம் நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தெற்கு வீதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் நேற்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காளியம்மன் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அசுரனை அழிக்கும் வைபவம் நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story






