என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜோதிடம் பார்ப்பதாக கூறி திருட்டில் ஈடுபட்டவர் கைது
- சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- 5 கிராம் நகை, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே மணப்படையூர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த நபர்களை ஏமாற்றி நகைகளை திருடி சென்றதாக வந்த புகாரை யடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் ஆசிஷ்ராவத் உத்தரவுப்படி , கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்கா ணிப்பாளர் கீர்த்திவாசன் மேற்பா ர்வையில், கும்பகோணம் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் தலைமையிலான போலீசார்கள் செல்வகுமார், பாலசுப்ரமணியம், நாடிமுத்து, ஜனார்த்தனன், செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டது.
இந்த தனிப்படையினர் குற்ற செயல் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை யும், செல்போன் எண்களை யும் கண்காணித்து விசா ரணையில் ஈடுப்ப ட்டனர். விசாரணையில் கிருஷ்ண கிரி பகுதியை சேர்ந்த சக்தி வேல் ( வயது 23) என்பவர் திருடியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீ சார்அவரிடம விசாரணை நடத்தில் அவரிடம் இருந்து 5 கிராம் நகை, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர். பின்னர் சக்திவேல் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்