search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நண்பனை ஏமாற்றி ரூ.10 லட்சம் மோசடி- கொலை மிரட்டMoney Scam, Arrest, பணம் மோசடி, கைதுல் விடுத்ததால் கைது
    X

    நண்பனை ஏமாற்றி ரூ.10 லட்சம் மோசடி- கொலை மிரட்டMoney Scam, Arrest, பணம் மோசடி, கைதுல் விடுத்ததால் கைது

    • நஸ்ருதீன் அடியாட்களுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து நஸ்ருதீன்னை கைது செய்தார்.

    வண்டலூர்:

    நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் என்கிற தீபக் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் காரணை புதுச்சேரி பகுதியை சேர்ந்த நசீர் என்கிற நஸ்ருதீன் (31) என்பவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகி றார். இவர்கள் இருவரும் ஒன்றாக பணிக்கு சென்று வருவார்கள். இதனால் நண்பர்கள் ஆனார்கள்.

    இந்நிலையில் நஸ்ருதீன், மணிகண்டனின் ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பெற்று அவரது பெயரில் தனியார் வங்கியில் ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில் ரூ.10 லட்சத்து 25 ஆயிரத்தை மணிகண்டனிடம் கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்து உள்ளார். இந்நிலையில் பணத்தை கேட்டு மணிகண்டன் நெருக்கடி கொடுத்ததால், நஸ்ருதீன் அடியாட்களுடன் சென்று கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது தொடர்பாக மணி கண்டன் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து நஸ்ருதீன்னை கைது செய்தார். பின்னர் அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×