search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச தகவல் அனுப்பிய ராணுவ வீரர் - போலீசார் விசாரணை
    X

    இளம்பெண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச தகவல் அனுப்பிய ராணுவ வீரர் - போலீசார் விசாரணை

    • சுப்புராமு ராணுவவீரராக பணியாற்றி வருகிறார்.
    • இளம்பெண் ஒருவருக்கு சுப்புராமு செல்போனில் ஆபாச தகவல் அனுப்பி உள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள உமையதலைவன்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் சுப்புராமு (வயது25). இவர் ராணுவவீரராக பணியாற்றி வருகிறார்.

    தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன இளம்பெண் ஒருவருக்கு சுப்புராமு செல்போனில் அந்தரங்க பகுதி குறித்து ஆபாச தகவல் அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்புராமு, அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் திரு வேங்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவவீரர் சுப்புராமை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×