என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிநோய் தடுப்பூசி முகாம்
    X

    வெறிநோய் தடுப்பூசி முகாம்

    • கடுகூரில்வெறிநோய் தடுப்பூசி முகாம்
    • கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் தொடக்கி வைத்தார்

    அரியலூர்,

    உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், கடுகூர் கால்நடை மருந்தக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

    முகாமை கால்நடை பராமரிப்புத் துறை கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் தொடக்கி வைத்தார். கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், ஓட்டகோயில் கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், அரியலூர் மாவட்ட கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி பிரிவு கால்நடை உதவி மருத்துவர் விஜயராஜ், பயிற்சி கால்நடை மருத்துவர் ஜெயபாரதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட 53 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் கலந்து கொண்ட செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×