என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்,
ஆங்கிலேயர்ஆட்சி காலத்தில் அரியலூர் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்து வந்தது, ஜமீன் ஆட்சி நடைபெற்றது, இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் மன்னர்ஆட்சி ஒழிக்கப்பட்டது. அப்போது ஜமீன் மன்னர்கள் அனைத்து ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைத்தனர், அப்போது இருந்த அரசு நிலங்கள் எல்லாம் தனி நபர்பட்டா போட்டுள்ளனர்.அரியலூர்நகரில் உள்ள பிரதான சாலைகள் தேரோடும் தெருவீதிகள் எல்லாம் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி தற்போது நடை பாதையாக மாறிவிட்டது, கூட்ட நேரத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து கொண்டே போகிறது. எங்கு பார்த்தாலும் சாலை ஓரத்தில் கடைகள், வேன், கார், ஆட்டோக்களை நிறுத்திக்கொண்டிருக்கி றார்கள். சாலை ஓரத்தில் அனுமதியில்லாத விளம்பர தட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் இருந்தும், சாலை விபத்துகளிலிருந்தும் பொதுமக்களை காப்பாற்ற அண்ணாசிலை, தேரடி, எம்.ஜி.ஆர். சிலை, பெருமாள் கோவில் தெரு, சத்திரம், சின்ன கடை தெரு, பெரியகடைதெரு பகுதியிலுள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்வக்கில் சுகுமார்உட்பட ஏராளமான பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






