search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு தயாரிப்பு ஆலையில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு
    X

    பட்டாசு தயாரிப்பு ஆலையில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு

    • அரியலூர் பட்டாசு தயாரிப்பு ஆலையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
    • ஆய்வின் போது வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தையடுத்து அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு மற்றும் கடைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

    தா.பழூர் அடுத்த நாயக்கனைபிரியாள் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வயல் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தயாரிக்கும் ஆலைக்கு சென்ற அரியலூர் கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா, வெடிபொருள்கள், மூலப் பொருள்கள் பயன்பாடு குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஆலையின் வெளியே வாகனங்களை நிறுத்த வேண்டும். தீயணைப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவில் வைத்திருக்க வேண்டும். அரசின் சட்ட விதிக்குப்பட்டு, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆலை நிர்வாகியிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×