என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்தில், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும்.
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியரக, கருவூலம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த வேண்டும்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். பொருளாளர் காமராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி, எம்.ஆர்.பி செவிலியர் சங்கத் தலைவர் ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்
Next Story






