என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் 3நாள் சிறப்பு முகாம்
- மகளிர் உரிமை ெதாகை விண்ணப்பிக்க 3நாள் சிறப்பு முகாம்
- மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள் 466 நியாய விலைக் கடைப் பகுதிகளில் நடத்தப்பட்டன. இந்த இரண்டு கட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், விடுப்பட்டவர்களுக்கான சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம்கள் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் அறிவிப்பில், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத்திட்டம், முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.
தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்ய வருகிற இன்று(ஆக18), நாளை19, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
எனவே, அரியலூர் மாவட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத தகுதிவாய்ந்த பயனாளிகள் அனைவரும் 3நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தங்களது விண்ணப்பங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.






