என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
    X

    குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    • குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • பாலியல் வன்கொடுமை வழக்கில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தா.பொட்டகொல்லை வடக்குத் தெருவைச் சேர்ந்த மதியழகன் மகன் நாவரசு (வயது20). இவர் அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் நாவரசை கடந்த மாதம் 16 ஆம் தேதி கைது செய்து ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், நாவரசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து நாவரசு

    Next Story
    ×