என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
- பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திராவிடநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி மல்லிகா (வயது 39). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது வீட்டின் கட்டுமான பணியின்போது சிமெண்டு சாந்து மல்லிகாவின் வீட்டு தொட்டியில் விழுந்து தண்ணீர் அழுக்கானது. இதனை கண்ட மல்லிகா, பழனியம்மாளிடம் தொட்டியை மூடி விட்டு சிமெண்டு பூச வேண்டியது தானே என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பழனியம்மாள், அவரது மகள் துர்காதேவி மற்றும் ஞானப்பிரகாசம் (வயது 30) ஆகியோர் மல்லிகாவை இரும்பு மட்ட பலகையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த மல்லிகா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கிய ஞானப்பிரகாசத்தை கைது செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பழனியம்மாள், துர்காதேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






