என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரயில் மோதி பெண் பலி
- ரயில் மோதி பெண் பலியானார்
- பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார்
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டம், அல்லி நகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி செல்லம் (வயது 52). இவர், டாஸ்மாக் கடை அருகே கிடக்கும் காலியான மதுபான பாட்டில்களை சேகரித்து, கடையில் விற்று, சம்பாதித்து வந்தார். இந்நிலையில் அதிகாலை அரியலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இவர் மீது, அந்த வழியாகச் சென்ற குட்ஸ் ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து அரியலூர் இரும்புபாதை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






