என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது
    X

    மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது

    • மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது செய்யபட்டார்
    • விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 அரசுமது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி பகுதியில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கோடாலி பகுதியில் மது பாட்டில்களை சிலர் பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கோடாலி காலனி தெரு தங்கராசு மனைவி ராதிகா (வயது40) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராதிகா விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 அரசுமது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ராதிகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.



    Next Story
    ×