என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் செல்வநம்பி தலைமை வகித்தார்.

    அரியலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய தடா பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூரில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாசிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் செல்வநம்பி தலைமை வகித்தார். மாநில முதன்மை செயலர் உஞ்சை அரசன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாநிலப் பொறுப்பாளர் அன்பானந்தம், விவசாய அணி மாநில துணை செயலர் கருப்புசாமி, தொகுதி செயலாளர்கள் மருதவாணன், இலக்கியதாசன், செய்தித் தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.





    Next Story
    ×