என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையில் இருசக்கர வாகனம் திருட்டு
    X

    டாஸ்மாக் கடையில் இருசக்கர வாகனம் திருட்டு

    • டாஸ்மாக் கடையில் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வெங்கட்ரமணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவர் நேற்று மதியம் அரியலூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் தனது இரு சக்கர வாகனத்தை திருத்திவிட்டு மது அருந்த சென்றுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து மதுபான கடையை விட்டு வெளியே வந்த நிலையில் அவர் நிறுத்தி இருந்த பைக்கை காணாததை கண்ட ராசுவுக்கு அடித்த போதை முற்றிலும் தெளிந்துவிட்டது.

    பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது வெள்ளை சட்டை அணிந்து வந்த மர்ம நபர் நீண்ட நேரம் பைக் அருகில் நின்று கொண்டிருந்ததும், அப்போது மதுக்கடைக்கு வந்த மற்றொருவரிடம் சாவி வாங்கி பைக்கை ஆன் செய்து மீண்டும் சாவி அவரிடம் கொடுத்துவிட்டு திருடிய பைக்கோடு கிளம்பி சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து ராசு போலீசில் புகார் அளித்துள்ளார். அரசுக்கு வருமானம் தரக்கூடிய டாஸ்மாக் கடைகளில் இருசக்கர வானங்கள் திருட்டுப் போவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று ராசுவும், மது பிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×