என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவமனை உட்பட 3 கடைகளில் திருட்டு
அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் நகரை சேர்ந்தவர் சங்கர். ஹோமியோபதி மருத்துவர். விளாங்காரத் தெருவில் மருத்துவமனை வைத்துள்ளார். இவர் மருத்துவமனையை திறப்பதற்காக இன்று வந்த போது, மருத்துவமனையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது மேஜை உள்ளே வைத்திருந்த ரூ.3.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதே போல் அதே வணிக வளாகத்தில் உள்ள இரண்டு கடைகளிலும் திருட்டு முயற்சியும் நடத்துள்ளது. இச்சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
Next Story