என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தையை குத்தி கொன்ற மகன்
    X

    தந்தையை குத்தி கொன்ற மகன்

    • காதல் திருமணம் ெதாடர்பாக வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்தது
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பிலாக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் அருண் (22). இவர் கடந்த ஆண்டு திருப்பூரில் வேலை செய்தபோது, அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 'அண்ணன், அக்காள் ஆகியோருக்கு திருமணமாகாமல் உள்ள நிலையில், நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம்' என்று கேட்டு அருணுடன், அர்ச்சுனன் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குத்திக்கொலை இந்நிலையில் நேற்று முன்தினம் மரம் வெட்டும் வேலைக்கு சென்ற அருண், மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது அர்ச்சுனனும் குடிபோதையில் இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அருண், கத்தியை எடுத்து அர்ச்சுனனை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அர்ச்சுனன் பரிதாபமாக உயிரிழந்தார். கைது இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழப்பழுவூர் போலீசார், அர்ச்சுனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணை கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது

    Next Story
    ×