என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசியை கடத்தியவர் கைது
- 2 டன் அரிசி, லோடு வேன் பறிமுதல்
- சிறையில் அடைப்பு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், குடிமை பொருட்கள் கடத்தல் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் போலீசாருடன் இணைந்து வாரியங்காவல் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக டாட்டா ஏஸ் வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த கல்லாத்துர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கொளஞ்சி(வயது 31) என்பவரை கைது செய்து அவர் கடத்தி வந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் டாட்டா ஏசி வாகனத்தையும் பறி முதல் செய்து விசாரணை மேற்கொண்டு, அரிசி கடத்திச் சென்ற கொளஞ்சி யை பெரம்பலூர்நீதிம ன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்ப ட்டார். ரேஷன் அரிசி அரைக்கப்பட்ட மில்லின் உரிமையாளரைகைது செய்ய வும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது






