என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
    X

    மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    • மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இளமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் வைரம் (வயது 67), கூலி தொழிலாளி. அதே பகுதியில் வசிக்கும் அப்பாதுரை மகன் ராமநாதன் (64). இவர் தனக்கு தரவேண்டிய பணத்தை மூதாட்டி வைரத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமநாதன் மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டி வைரம் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் ராமநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×