என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது பாட்டிலால் வாலிபர் மண்டை உடைப்பு
- ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டிலால் வாலிபர் மண்டை உடைப்பு
- ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் புத்தர் புதுத் தெருவை சேர்ந்த வினோத்குமார்(வயது 28) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது திடீரென ராஜேஷ்குமார்(28) வினோத்குமாரை மது பாட்டிலால் மண்டையிலும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த வினோத்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவர் பேச முடியாத சூழல் உள்ளதால் அவரது சகோதரர் மனோஜ்குமார் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ்குமார் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






